பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், 18மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வினை, 4 ஆயிரத்து 901 பேர் எழுதினர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்2ஏ எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
பொள்ளாச்சியில், திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, புளியம்பட்டி பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 18 மையங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வினை தாசில்தார் ஜெயசித்ரா, டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள் ஜெயவேல், ஐயப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்வு எழுத மொத்தம், 6,250 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 4,901 பேர் தேர்வெழுதினர்; 1,349 பேர் தேர்வு எழுதவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment